நெமிலிச்சேரி சமிதி நிகழ்ச்சிகள்
பாலவிகாஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஸ்ரீ சத்ய சாயி விழுக்கல்வி நிறுவனத்தில் ஜனவரி 24, 2010 அன்று நடத்தியது. இதில் 182 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி வேதபாராயணம், பஜனை ஆகியவற்றோடு தொடங்கியது.
பொங்கல் தினத்தன்று 250 வீடற்ற துப்புரவுத் தொழிலாளிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் தயாரித்து வழங்கியது. பொங்கல் வழங்குவதற்கு முன்னர் பஜனையும் சுவாமியைப் பற்றிய உரையும் நடத்தப்பட்டன.
பாலவிகாஸ் குழந்தைகளை வண்டலூர் மிருகக் காட்சிசாலைக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் சென்றது.
நன்மங்கலம் முதியோர் இல்லத்தில் ஸ்ரீ சத்ய சாயி தேசீய நாராயண சேவை மார்ச் 16, 2010 யுகாதி அன்று நடத்தப்பட்டது. மதிய உணவுக்கு முன்னர் 12.00 முதல் 12.30 வரை பஜனை நடத்தப்பட்டது.
Entry filed under: Uncategorized. Tags: சிவராத்திரி, நன்மங்கலம், பொங்கல், மிருகக்காட்சி சாலை, விழிப்புணர்வு, homeless, Pongal, Sivarathri.




Trackback this post